Breaking News

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆகஸ்ட் 26-ம் தேதி- மநீம நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மக்கள் நீதி மையம் கட்சியின் மாநில நிர்வாகிகளுடன் சென்னையில் வரும் 26-ம் தேதி கமல்ஹாசன் ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் விடுபட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு செப்டம்பர் 15-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாநில தேர்தல் ஆணையமும் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக சென்னையில் வரும் 26-ம் தேதி அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3j5SYtq
via

No comments