Breaking News

மதுரை ஆதீனத்தின் புதிய சன்னிதானத்துக்கு இன்று பட்டம் சூட்டும் விழா: 293-வது ஆதீனமாக முறைப்படி பொறுப்பேற்கிறார்

மதுரை ஆதீனத்தின் புதிய சன்னிதானமாக ஹரிகர தேசிக பரமாச்சாரிய சுவாமிகளுக்கு இன்று பட்டம் சூட்டப்படுகிறது.

தமிழகத்தில் மிகப் பழமையான சைவத் திருமடங்களில் மதுரை ஆதீனமும் ஒன்று. இந்த மடத்தின் 292-வது குரு மகா சன்னிதானமாக சீர்காழியைச் சேர்ந்த அருணகிரிநாதர் 1980-ல் பொறுப்பேற்றார். இவர் உடல்நலக் குறைவால் 10நாட்களுக்கு முன்பு முக்தியடைந்தார். இவரது உடல் மதுரை முனிச்சாலை சந்திப்பு அருகே ஆதீன மடத்துக்குச் சொந்தமான இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2XEQKc2
via

No comments