Breaking News

மூதாட்டிக்கு ஒரேநாளில் 2 முறை கரோனா தடுப்பூசி

நாகை மாவட்டம் வேதாரண்யத்தைஅடுத்த வண்டுவாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகப்பன் மனைவி அலமேலு (70). விவசாயத் தொழிலாளியான இவர், ஆக.15-ம் தேதி சரபோஜிராஜபுரம் பள்ளியில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொண்டார். பின்னர், அவர் அங்குள்ள ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தார்.

அப்போது, மருத்துவப் பணியாளர் வரிசையில் நிற்குமாறு கூறியுள்ளார். வரிசையில் சென்ற மூதாட்டி அலமேலுவுக்கு 2-வது முறையாக மீண்டும் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது. விவரங்களை பதிவு செய்யும்போது 2 தடுப்பூசி செலுத்தியது தெரியவந்தது. அதிர்ச்சிஅடைந்த செவிலியர்கள் மருத்துவரிடம் கூறினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3AO6qYO
via

No comments