புதுக்கோட்டை மாவட்ட பள்ளி மாணவி தயாரித்துள்ள கிராமப்புற மேம்பாட்டு திட்டத்தை பரிசீலிக்கலாம்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே கழியராயன்விடுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் மகள் கவுரி(16). இவர், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். இவர், அரசின் திட்டங்களை பெறுவதற்கும், மனுக்களை அளிப்பதற்கும் பிற அலுவலகங்களுக்கு மக்கள் செல்வதை தவிர்ப்பதற்காக கிராம அளவில் வலுவான புள்ளிவிவரங்களுடன்கூடிய கட்டமைப்பை உருவாக்குவது குறித்து கிராமப்புற மேம்பாட்டு திட்ட அறிக்கையை தயாரித்து மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பினார்.
இதை, எந்த அரசும் ஏற்காததால், இதை செயல்படுத்துவதற்கு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3meuEHD
via
No comments