Breaking News

அரிசி ஆலை அதிபர் மகனை கடத்தி ரூ.3 கோடி பறித்த கும்பல்: புகார் அளித்த 6 மணி நேரத்தில் நால்வர் கைது

திருப்பூரில் போலீஸ் எனக்கூறி, அரிசி ஆலை அதிபரின் மகனைக் கடத்தி ரூ.3 கோடியை மர்மநபர்கள் பறித்தனர். இச்சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி, காடையூரில் அரிசி ஆலை, திருமண மண்டபங்களை வாடகைக்கு விடுதல் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். இவரது மகன் சிவபிரதீப்(22). கடந்த 22-ம் தேதி அரிசி ஆலைக்கு வந்த சிவபிரதீப், மதியம் உணவுக்காக காரில் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3gq8j6e
via

No comments