சுதந்திர தினத்தின் வெள்ளி விழா, பொன் விழாவைத் தொடர்ந்து திமுக ஆட்சியில் கொண்டாடப்படும் பவள விழா: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

சுதந்திர தினத்தின் வெள்ளி விழா, பொன் விழாவை கருணாநிதி முதலமைச்சராக இருந்து கொண்டாடினார். சுதந்திர தினத்தின் பவள விழாவினை மீண்டும் திமுக அரசு கொண்டாடுவது தமிழ்நாட்டு மக்களுக்கு பெருமிதம் அளிக்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "இந்திய திருநாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த சுதந்திர தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2XjpIXy
via
No comments