Breaking News

சிதம்பரத்தில் ஆக்கிரமிப்பு கோயில் இடிப்பு: மௌன மட சுவாமிகள் எதிர்ப்பு

சிதம்பரம் சபாநாயகர் தெருவில் சீர்காழி செல்லும் மெயின் ரோட்டில் அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன்பு சிறிய அளவிலான வீரனார் கோயில் இருந்தது. இந்த கோயிலை பொதுமக்கள் வழிபட்டு வந்தனர். இக்கோயில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பில் இருந்ததால் வருவாய்த் துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் நேற்று இடித்து, அகற்றினர். இது குறித்து தகவலறிந்த இந்து முன்னணியினர் அப்பகுதியில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தக் கோயிலுக்கு அருகில் உள்ள மௌன மடத்தைச் சேர்ந்த மௌன சுந்தரமூர்த்தி சுவாமிகள் இடித்த கோயில் இருந்த இடம் மடத்துக்கு சொந்தமானது என்று கூறி, கோயிலை இடித்து அகற்றியதை கண்டித்து கோயில் இடத்த இடத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2W5iNk1
via

No comments