Breaking News

தென்காசி மாவட்ட கிராமப்புறங்களில் கொட்டப்படும் கேரள எலக்ட்ரானிக் கழிவுகளால் மக்கள் வேதனை

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டம், குறிப்பன்குளம் கிராமத்தின் மேற்கு பகுதியில் உள்ள குளத்தில்கேரள மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட எலக்ட்ரானிக் கழிவுகளை கொட்டியுள்ளனர்.

கடந்த ஓராண்டுக்கு முன்பு இப்பகுதியில் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளிலும் கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவக் கழிவுகள், எலக்ட்ரானிக் கழிவுகளை கொண்டுவந்து கொட்டினர். தற்போது மீண்டும் கழிவுகளை கொண்டுவரத் தொடங்கியுள்ளனர். மக்காத கழிவுகளான இவற்றை தீ வைத்து எரித்தால் மட்டுமே அழிக்க முடியும். இந்த புகையால் கடும் பாதிப்பு ஏற்படும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/384EcNb
via

No comments