Breaking News

உயர் நீதிமன்றம் உத்தரவால் சர்வதேச செவித்திறன் குன்றியோர் தடகளப் போட்டியில் பங்கேற்க குமரி வீராங்கனைக்கு வாய்ப்பு: தாயாருடன் டெல்லி பயணம், கிராம மக்கள் கொண்டாட்டம்

தகுதிச் சுற்றில் தேர்வான பின்னரும்நிராகரிக்கப்பட்ட நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து போலந்தில் நடைபெறும் செவித்திறன் குன்றியோர் தடகளப் போட்டியில் பங்கேற்பதற்காக குமரி மாவட்டத்தை சேர்ந்த வீராங்கனை சமீஹா பர்வீன் டெல்லி சென்றார். இதையடுத்து அவரது சொந்த ஊரில் மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூட்டை சேர்ந்த முஜீப்,சலாமத் தம்பதியரின் மகள் சமீஹா பர்வீன் (18), காதுகேட்கும் திறனை இழந்தவர். இருந்த போதும் தடகள விளையாட்டில் அபார திறமை கொண்டிருந்தார். இதை பார்த்து வியந்த ஆசிரியர்கள் அவருக்கு தொடர்ந்து பயிற்சி அளித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3iKQIr9
via

No comments