Breaking News

இன்று திறக்கப்படும் நிலையில் திரையரங்குகளில் பராமரிப்பு பணிகள் தீவிரம்

தமிழகத்தில் திரையரங்குகள் இன்று திறக்கப்படவுள்ள நிலையில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளில் பராமரிப்பு பணிகள் நேற்று தீவிரமாக நடைபெற்றன.

தமிழகத்தில் கரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்துவரும் நிலையில், இன்று முதல் 50 சதவீதம் பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளில் முன்னேற்பாட்டு பணிகள் நேற்று தீவிரமாக நடைபெற்றன. திரையரங்குகள் கடந்த 4 மாதங்களாக திறக்கப்படாமல் இருப்பதால், ஒவ்வொரு இருக்கையையும் தனித்தனியாக கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3z9H4Ez
via

No comments