தமிழகத்தில் 2-வது நாளாக தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா

தமிழகத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக கரோனா தொற்று அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கரோனா தொற்று கடந்த ஆண்டு மார்ச் முதல் வாரத்தில் பரவத் தொடங்கியது. ஆரம்பத்தில் தினமும் ஒற்றை இலக்கத்தில் பதிவாகிவந்த தொற்று பாதிப்பு, படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. 7 ஆயிரத்தை நெருங்கிய தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஊரடங்கு, தடுப்பூசி போன்ற பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளால் அக்டோபர் மாதத்துக்குப் பின் படிப்படியாக குறைந்து 500-க்கு கீழ் வந்தது. அதேபோல் 100-ஐ நெருங்கியிருந்த உயிரிழப்புகளும் 4, 5 ஆக குறைந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/39f6plb
via
No comments