தமிழகம் முழுவதும் 36 மணிநேர ‘ஆபரேஷன் டிஸ்ஆர்ம்’- 2,512 ரவுடிகள் கைது, 8 துப்பாக்கி பறிமுதல்: நெல்லையில் டிஜிபி சைலேந்திரபாபு தகவல்

“தமிழகம் முழுவதும் நடைபெற்ற 36 மணிநேர ‘ஆபரேஷன் டிஸ்ஆர்ம்’ என்ற பெயரிலான சோதனைநடவடிக்கையில், 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டு, 934 கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள், 8 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என்று டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் தென் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3CKX3tP
via
No comments