பெரியாறு அணையில் தண்ணீர் குறைப்பு; உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு விரோதமானது: கூடலூர் போராட்டத்தில் விவசாயி சங்க ஒருங்கிணைப்பு குழு புகார்

பெரியாறு அணையில் மேற்கொள்ளப்பட்டுள்ள தண்ணீர் குறைப்பு நடவடிக்கை உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு விரோதமானது எனறு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பிஆர்.பாண்டியன் கூறினார்.
முல்லை பெரியாறு அணையில் நீர்மட்டத்தை உயர்த்தவிடாமல் தடுக்கும் கேரளாவைக் கண்டித்தும், அணையை உடைக்க சதி நடைபெறுவதாகக் கூறியும் தமிழக - கேரள எல்லையான குமுளியில் விவசாயிகள் முற்றுகைப் போராட்டம் நடத்தச் சென்றனர். இவர்களை போலீஸார் கூடலூரில் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3op9x4O
via
No comments