திருவள்ளூர் அருகே சேதமடைந்த கொரட்டூர் அணைக்கட்டுக்கு பதிலாக புதிய அணை அமைக்கும் பணி 85% நிறைவு
திருவள்ளூர் அருகே கூவம் ஆற்றின் குறுக்கே 2015 மழை வெள்ளத்தின்போது சேதமடைந்த கொரட்டூர் அணைக்கட்டுக்கு பதிலாக புதிய அணைக்கட்டு அமைக்கும் பணியில் 85 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது என நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அருகே கேசாவரம் பகுதியில் கல்லாற்றின் கிளை ஆறாக உருவாகும் கூவம், கடம்பத்தூர், மணவாள நகர், பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக 72 கி.மீ.தூரம் ஓடி, சென்னையில் நேப்பியர் பாலம் அருகே வங்கக் கடலில் கலக்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3zCorZj
via
No comments