காஞ்சிபுரத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் பெண் பாதிப்பு; நண்பர்களுடன் எச்சரிக்கையுடன் பழக வேண்டும்: பெண்களுக்கு காவல்துறையினர், சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தல்

பெண்கள் புதிய நண்பர்களுடன் பழகும்போது எச்சரிக்கையாக இருப்பதுடன், அவர்கள் என்ன உதவி செய்வதாகக் கூறினாலும் நம்பி, யார் துணையும் இல்லாமல் அவர்களுடன் தனியாகச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று காவல் துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரம்யா (19) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனியார் கடை ஒன்றில் பணி செய்து வருகிறார். அப்போது அந்தக் கடைக்கு அடிக்கடி வரும் பெரிய காஞ்சிபுரம் வணிகர் தெருவைச் சேர்ந்த குணசீலன்(23) என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்படுகிறது. இருவரும் தங்களது செல்போன் எண்ணை பரிமாறிக் கொண்டு அடிக்கடி பேசுகின்றனர். இந்தச் சூழ்நிலையில் அந்தப் பெண்ணுக்கு வேலை வாங்கித் தருவதாகவும், உதவிகள் செய்வதாகவும் குணசீலன் கூறுகிறார். இதனை நம்பி அந்தப் பெண்ணும் அவருடன் நெருங்கிப் பழகுகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3AaawKQ
via
No comments