Breaking News

விரைவில் வெளியாகும் தேர்தல் அறிவிப்பு: புதுவை மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் அக்டோபரில் நிறைவு- அடுத்த வாய்ப்புக்கு என்.ஆர்.காங் - பாஜக போட்டி

புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் பதவிகாலம் அக்டோபரில் நிறைவடைய உள்ளதால் விரைவில் தேர்தல் அறிவிப்பு வெளியாகவுள்ளது. இப்பதவி ஆளுங்கட்சி கூட்டணியிலுள்ள என்.ஆர்.காங்கிரஸுக்கா, பாஜகவுக்காக என்ற கேள்விக்கான விடை விரைவில் தெரியவரும்.

புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினராக அதிமுகவை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் உள்ளார்.இவர் முதல்வர் ரங்கசாமியின் நெருங்கிய நண்பர். கடந்த மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலின்போது கோகுலகிருஷ்ணனைஎம்பியாக்க ரங்கசாமி விரும்பினார். ஆனால், அப்போது என்.ஆர்.காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியதால், யாரும் எதிர்பார்க்காத வகையில்என்.ஆர்.காங்கிரஸைச் சேர்ந்த தனது நண்பர்கோகுலகிருஷ்ணனை அதிமுக உறுப்பினராக்கி, புதுச்சேரி மாநிலங்களவை எம்பி.,யாக்கினார் ரங்கசாமி. எம்பி கோகுலகிருஷ்ணனின் பதவிக் காலம் அக்டோபர் 6-ம் தேதியோடு முடிவடைகிறது. புதிய எம்பியை தேர்வு செய்ய தேர்தல் நடைபெற உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2WMm2xI
via

No comments