Breaking News

கலவரத்தில் பொது சொத்துகளுக்கு சேதம்; பாமகவிடம் இழப்பீடு வசூலிக்க சட்ட ரீதியாக தடை இல்லை: கட்சித் தலைவர் ஜி.கே.மணி நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு

மரக்காணம் கலவரத்தில் பொதுசொத்துகளுக்கு ஏற்பட்ட சேதத்துக்கான இழப்பீட்டை வசூலிப்பதற்கான விசாரணைக்கு ஆஜராகுமாறுபாமக தலைவர் ஜி.கே.மணிக்குஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாமல்லபுரத்தில் கடந்த 2013-ம் ஆண்டு ஏப்.25-ம் தேதி பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் சித்திரைத் திருவிழா நடத்தப்பட்டது. அப்போது மரக்காணம் அருகே கட்டையன் தெரு காலனி பேருந்து நிறுத்தத்தில் கலவரம் ஏற்பட்டு, சிலைகள் சேதப்படுத்தப்பட்டன. அந்த கலவரம் காரணமாக பாமகவினர் கைது செய்யப்பட்டனர். அதைக் கண்டித்து கிருஷ்ணகிரியில் நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3AMMl5r
via

No comments