பணியின்போது உயிர்நீத்த காவலர்களுக்கு வீர வணக்க நாள் அனுசரிப்பு- 144 குண்டுகள் முழங்க மரியாதை; டிஜிபி சைலேந்திர பாபு மலர்வளையம் வைத்து அஞ்சலி

சென்னை டிஜிபி வளாகத்தில் நடந்த வீர வணக்க நாள் நிகழ்ச்சியில், பணியின்போது உயிர் நீத்தகாவலர்களுக்கு 144 துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது. காவலர் நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து டிஜிபி சைலேந்திர பாபு அஞ்சலி செலுத்தினார்.
காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள ‘ஹாட் ஸ்ப்ரிங்ஸ்’ என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் கடந்த 1959அக். 21-ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், இந்தியாவின் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் வீர மரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, நாடு முழுவதும், பணியின்போது மரணம் அடையும் காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் அக்.21-ம் தேதி ‘காவலர் வீர வணக்க நாள்’ கடைபிடிக்கப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3m4EefM
via
No comments