Breaking News

பிரதமரின் நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் 200 குளங்கள் சீரமைப்பு பணி தொடக்கம்: அடுத்த ஆண்டு ஏப்ரலில் முடிக்க திட்டம்

தமிழகத்தில் 23 மாவட்டங்களில் உள்ள 200 குளங்களை சீரமைக்கும் திட்டத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியுள்ளன.

சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பேசும்போது, “பிரதமரின் வேளாண் நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 200 குளங்கள் சீரமைக்கப்படும்’’ என்று அறிவித்தார். தமிழகத்தில் பிரதமரின் வேளாண் நீர்ப்பாசனத் திட்டம்5 கட்டங்களாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ்குளங்களின் கரைகள் பலப்படுத்தப்பட்டு, மதகுகள், கலிங்கல் ஆகியவை பழுதுபார்க்கப்படும். தேவைப்பட்டால் வரத்துக் கால்வாய்கள், குளங்கள் தூர்வாரப்படும். மொத்தத்தில் குளங்களை பழுதுபார்த்து, சீரமைத்து, மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம். இத்திட்டத்துக்கு தேவையான நிதியில் 60 சதவீதத்தை மத்திய அரசும், 40 சதவீதத்தை மாநில அரசும் வழங்குகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3mne0nw
via

No comments