சென்னையில் 50 ஆண்டுகளுக்கு முன் பதிக்கப்பட்ட கழிவுநீர் குழாய்களை மாற்ற புதிய திட்டம்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னை கோடம்பாக்கம் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய கழிவுநீர் குழாய் பதிக்கும் பணிகள், 10 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணிகளை அமைச்சர் கே.என்.நேரு நேற்று பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சென்னையில் தினசரி 1,000 மில்லியன் லிட்டர் குடிநீர் 85 லட்சம் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நீர் சேமிப்பின் அவசியத்தை உணர்த்தும் வகையில் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து சென்னை மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நீர்நிலைகளுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக 800 மில்லியன் லிட்டர் அளவிலான கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து மறு பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, இதுவரை 140 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3B4dxvS
via
No comments