கட்சியின் பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு அதிமுக தொண்டர்களுக்கு சசிகலா கடிதம்: ஜெ. பாதையில் மக்கள் மனங்களை வெல்வோம் என சூளுரை

பொதுச் செயலாளர் என்ற பெயரில் அதிமுக தொண்டர்களுக்கு சசிகலா திடீரென கடிதம் எழுதியுள்ளார். "அம்மா பாதையில் மக்கள் மனம் வெல்வோம். ஒன்றுபடுவோம், வென்று காட்டுவோம்" என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக பொன்விழாவை யொட்டி தனது அரசியல் பிரவேசத்தை மீண்டும் தொடங்கியுள்ள சசிகலா, அதிமுக பொதுச் செயலாளர் என்ற பெயரில் அதிமுக தொண்டர்களுக்கு அவர் நேற்று திடீரென கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். நமது எம்.ஜி.ஆர். நாளிதழில் அதிமுக தொண்டர்களுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் என்ற அந்தஸ்தில் அவர் எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3lU9EFF
via
No comments