ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் அண்ணாமலை சந்திப்பு: குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட எம்பிக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி மனு
ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை நேற்று சந்தித்துப் பேசினார். குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட எம்பிக்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி மனு அளித்தனர்.
தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை, ஆளுநர் மாளிகையில் நேற்று மாலை ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துப் பேசினார். 30 நிமிடங்களுக்கு மேல் நீடித்த இந்தச் சந்திப்பின்போது, தமிழக பாஜக முன்னாள் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் தேசியச் செயலாளர் எச்.ராஜா, சட்டப்பேரவை பாஜக குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில துணைத் தலைவர் எம்.சக்கரவர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3DQhOoP
via
No comments