Breaking News

அதிமுக மாவட்டச் செயலர் மீதான தாக்குதல்: முன்ஜாமீன் கேட்டு ராஜேந்திரபாலாஜி மனு

முன்னாள் முதல்வர் பழனிசாமி, செப். 24-ல் சாத்தூர் வந்தபோது அதிமுகவினர் அவருக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆதரவாளர்களுக்கும், மாவட்டச் செயலர் ரவிச்சந்திரன் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் ரவிச்சந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்களைத் தாக்கியதாக ராஜேந்திரபாலாஜி, ராசு, ஹரிஹரசுதன், பாண்டியராஜன், மாரிக்கனி ஆகியோர் மீது சாத்தூர் டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3Bf5JbE
via

No comments