கோயில்களில் காணிக்கையாக பெறப்பட்டதங்க நகைகள் உருக்கப்பட்டுள்ளதா?- விவரங்களை அனுப்ப அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவு

தமிழகம் முழுவதும் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளகோயில்களில் பக்தர்கள் காணிக்கையாக அளித்த நகைகளைஉருக்கி தங்கக் கட்டிகளாக மாற்றவும், அவற்றை வங்கிகளில் டெபாசிட் செய்து அதன்மூலம் வரும் வருவாயை கோயில் வளர்ச்சிப் பணிகளுக்கு பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோயில்களில் இதுவரை காணிக்கையாக பெறப்பட்ட தங்க நகைகள் உருக்கப்பட்டுள்ளதா என்ற விவரங்களை அனுப்பி வைக்க அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3FTKU8l
via
No comments