முறைகேடு புகாருக்கு ஆதாரம் கேட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி: இணையத்தில் வைரலாகும் அண்ணாமலை பதிவு

மின் கொள்முதல் தொடர்பான புகாருக்கு ஆதாரத்தை அமைச்சர் செந்தில்பாலாஜி கேட்டு கெடுவிதிக்க, உடனடியாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வங்கிகளில் அரசுப் பொறியாளர்களின் கணக்குகளில் திடீரென தொகைகள் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த 18-ம் தேதி செய்தியாளர்களிடம், ‘‘தமிழகத்தில் செயற்கையான மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி தனியார் நிறுவனங்களிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை கொள்முதல் செய்ய திமுக அரசு திட்டமிட்டு வருகிறது. ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.20-க்கு, உற்பத்தி விலையை விட 4 மடங்கு அதிக விலைக்கு கொள்முதல் செய்ய திமுக அரசு திட்டமிட்டுள்ளது’’ என்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3E0k4K5
via
No comments