Breaking News

முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான முறைகேடு வழக்கு; 10 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்: லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக பதியப்பட்ட டெண்டர் முறைகேடு வழக்கின் புலன் விசாரணையை முடித்து, 10 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்குடெண்டர் வழங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்களுக்கே டெண்டர்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறி, திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3BZfjPB
via

No comments