Breaking News

ரூ.13 லட்சம் மோசடி புகாரில் முன்னாள் முதல்வர் பழனிசாமியின் உதவியாளர் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.13 லட்சம் மோசடி செய்ததாக எழுந்த புகாரில் முன்னாள் முதல்வர் பழனிசாமியின் உதவியாளர் கைது செய்யப்பட்டார்.

சேலத்தை அடுத்த ஓமலூர் நடுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி (45). இவர் முன்னாள் முதல்வர் பழனிசாமியிடம் உதவியாளராக பல ஆண்டுகள் பணியாற்றி வந்தார். இவர் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாகக் கூறி, கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (28) என்பவர், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த மாதம் புகார் அளித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3E9wfow
via

No comments