Breaking News

நாகை மாவட்டத்தில் தொடரும் கனமழை: தண்ணீரில் மூழ்கிய 1.62 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள்

நாகை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் 1.62 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதேபோல, தஞ்சாவூர் மாவட்டத்திலும் 40 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

நாகை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பல இடங்களிலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்தது. நகர விரிவாக்கப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. 102 குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன. பெரும்பாலான சாலைகள் சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3E3OATQ
via

No comments