Breaking News

திருப்பதி போல தரிசன ஏற்பாடு, வசதிகள்; திருச்செந்தூர் கோயில் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை: பணிகளை 2 ஆண்டுக்குள் முடிக்க திட்டம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிகோயில் மேம்பாட்டு பணிகளை 2 ஆண்டுக்குள் முடிக்க முதல்வர்ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிகோயில் ரூ.300 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில், இக்கோயிலின் மேம்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம்முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. இதில், இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, மீன்வளத் துறைஅமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3objN0K
via

No comments