Breaking News

வேகமாக நிரம்புகிறது மேட்டூர் அணை: 30 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு அமைப்பு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116 அடியாக உயர்ந்துள்ள நிலையில், நாளை முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், 30 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் அணை நிலவரம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துள்ள கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 15 ஆயிரத்து 740 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 29 ஆயிரத்து380 கனஅடியாக அதிகரித்தது. நேற்று முன்தினம் 114.46 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 116.10 அடியாக உயர்ந்தது. நீர்இருப்பு 87.38 டிஎம்சியாக உள்ளது. அணையில் இருந்து காவிரியில் விநாடிக்கு 100 கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு 400 கனஅடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3qot0oO
via

No comments