Breaking News

சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் பெண் எஸ்பி 6 மணி நேரம் சாட்சியம்: விழுப்புரம் குற்றவியல் நடுவர் மன்றத்தில் இன்றும் விசாரணை தொடர்கிறது

பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் பூட்டிய அறைக்குள் 6 மணி நேரமாக பெண் எஸ்பி சாட்சியம் அளித்தார்.

தமிழக காவல்துறையில் சிறப்புடிஜிபியாக பணியாற்றி வந்தவர் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கடந்த ஏப்ரல் மாதம் பெண் எஸ்பி ஒருவர் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து காவல்துறை சிறப்பு டிஜிபி மற்றும் அவருக்கு உதவிய செங்கல்பட்டு எஸ்பி ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதோடு, பாலியல் புகார் குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3DcUnpu
via

No comments