Breaking News

நீர்மூழ்கி கப்பல் ரகசியங்களை வெளியிட்ட கடற்படை அதிகாரி உட்பட 6 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

கடற்படைக்காக நவீன நீர்மூழ்கி கப்பல் ஒன்றை வடிவமைக்கும் திட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ரகசிய ஆவணங்களை கோடிக்கணக்கில் பணத்தை பெற்றுக் கொண்டு தனியார்நிறுவனங்களுக்கு விற்கப்பட்ட தாக கடந்த ஆகஸ்ட் மாதம் புகார் எழுந்தது.

இதுதொடர்பாக சிபிஐ மேற்கொண்ட விசாரணையில், கடற்படையில் பணிபுரியும் அதிகாரிகள், ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி, மும்பை, விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் உள்ள பல்வேறு பகுதிகளில் சிபிஐ அதிகாரிகள் கடந்த செப்டம்பர் 2-ம் தேதி சோதனை நடத்தினர். இதில், ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி ரன்தீப் சிங் என்பவரின் வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.2.4 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3mPHwEh
via

No comments