Breaking News

வேலூர் பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் வீட்டில் நடந்த சோதனையில் ரூ.2.27 கோடி சிக்கியது: லஞ்ச ஒழிப்புப் போலீஸார் நடவடிக்கை

வேலூர் கோட்ட பொதுப்பணித்துறை தொழில்நுட்ப கல்வி செயற்பொறியாளரிடம் இருந்தும், ஓசூரில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் நடத்திய சோதனையின்போது ரூ.2.27 கோடி ரொக்கம் பறிமுதல் செய்துள்ளனர்.

வேலூர் தொரப்பாடியில் உள்ள தந்தை பெரியார் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் பொதுப்பணித் துறை வேலூர் கோட்ட தொழில்நுட்ப கல்வி செயற்பொறியாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இதன் கட்டுப்பாட்டில் உள்ள 9 மாவட்டங்களில் கட்டப்படும் அரசு கல்லூரிகளின் கட்டிடங்களுக்கு ஒப்பந்தம் வெளியிடுவது, பணிகளை பார்வையிடுவது, நிதிவிடுவிப்பது, தனியார் கல்லூரி கட்டிடங்களுக்கு தடையில்லா சான்று வழங்குவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3EJBZoQ
via

No comments