Breaking News

ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன; சேலத்தில் மாலை 6 மணிக்கு கடைகள் மூடல்: மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க சேலத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு புதிய கட்டுப்பாடுகளின்படி நேற்று மாலை 6 மணிக்கு கடைகள் மற்றும் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டன.

சேலம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து, சேலத்தில் தளர்வுகளுடன் அமலில் உள்ள ஊரடங்கில், புதிய கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி நேற்று (9-ம் தேதி) முதல் வரும் 23-ம் தேதி வரை அமலில் இருக்கும் என உத்தரவிடப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2X7HHQB
via

No comments