Breaking News

மூதாட்டியை காரில் அழைத்துச் சென்று ரேஷன் பொருட்கள் பெற்றுத்தந்த எம்எல்ஏ

சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரின் காரை மறித்து, நியாயவிலைக் கடையில் முறையாக பொருட்கள் விநியோகிக்கப்படவில்லை என குற்றம்சாட்டிய மூதாட்டியை, காரில் அழைத்துச் சென்று பொருட்கள் கிடைக்க எம்எல்ஏ ஏற்பாடு செய்தார்.

திருப்பூர் கே.வி.ஆர் நகர் பகுதியிலுள்ள மாநகராட்சி பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டு வரும் பணிகளை, தெற்கு தொகுதி சட்டப்பேரவைத் உறுப்பினர் க.செல்வராஜ் நேற்று ஆய்வு செய்ய வந்தார். அப்போது, அவரின் காரை வழிமறித்த மூதாட்டி கன்னியம்மாள் (70), கே.வி.ஆர் நகர் பகுதியிலுள்ள நியாயவிலைக் கடையில் முறையாக பொருட்கள் விநியோகிக்கப்படுவதில்லை என்றும், இதுகுறித்து கேட்டால் தரக்குறைவாக கடை ஊழியர்கள் பேசுவதாகவும் குற்றம்சாட்டினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3jImYui
via

No comments