Breaking News

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்காக நவ.8-ல் தேனியில் முற்றுகை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவிப்பு

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்காக நவ.8-ம் தேதிதேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முல்லைப் பெரியாறு அணையின் கட்டுப்பாடு முழுவதும் தமிழகத்திடம் உள்ளது. ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தமிழக அமைச்சர், தேனி ஆட்சியர் இல்லாமல் அணையின் நீர்மட்டம் 136 அடி இருக்கும்போதே, கேரள அரசு முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீரை திறந்துவிட்டுள்ளது. அணையில் 142 அடி வரை நீரை தேக்கிவைக்காதது ஏன் என பலமுறை கேட்டும், தமிழக அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3BJRqLG
via

No comments