Breaking News

கோட்டக்குப்பத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது கோர விபத்து - நாட்டுவெடி வெடித்து தந்தை, மகன் உயிரிழப்பு

தமிழகம் - புதுச்சேரி எல்லையில் நாட்டு வெடிகள் வெடித்து ஸ்கூட்டரில் சென்ற தந்தை, மகன் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி, அரியாங்குப்பம், காக்கயான் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கலைநேசன் என்ற கலையரசன் (37). இவர், புதுச்சேரியை அடுத்துள்ள தமிழகப் பகுதியான கோட்டக்குப்பம் அருகே கூனிமேட்டில் உள்ள தனது மனைவி ரூபினாவை பார்த்து விட்டு, நாட்டு வெடிகள் அடங்கிய சிறு மூட்டையை தனது ஸ்கூட்டரில் ஏற்றிக்கொண்டு, 7 வயது மகன் பிரதீஷுடன் நேற்று முன்தினம் பிற்பகல் சின்ன கோட்டக்குப்பம் நோக்கிச் சென்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3bQBQDi
via

No comments