Breaking News

அண்டை மாநிலங்களுக்கு இணையாக பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க முதல்வருக்கு லாரி உரிமையாளர்கள் கோரிக்கை

அண்டை மாநிலங்களுக்கு இணையாக தமிழகத்திலும் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்காவிட்டால், நமது மாநில வாகனங்கள் அண்டை மாநிலங்களுக்கு சென்று டீசல் பிடிக்கும் சூழல் உருவாகும் என தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சம்மேளனத்தின் மாநிலச் செயலாளர் வாங்கிலி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் லாரிகள், பேருந்துகள் என சுமார் 4.5 லட்சம் கனரக வாகனங்கள் உள்ளன. கடந்த 2 ஆண்டுகளாக ஆயில் நிறுவனங்கள் நாள்தோறும் டீசல் விலையை உயர்த்தி வந்ததால், கட்டுப்படியான வாடகை கிடைக்காமல் சுமார் 30 சதவீதத்துக்கு மேற்பட்ட லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3GVsdBR
via

No comments