Breaking News

தாம்பரம் அருகே குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீரால் அவதி: வெளியேற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், தாம்பரம் அருகேயுள்ள முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

வரதராஜபுரம் பகுதியில் வெள்ளம் சூழ்ந்த குடியிருப்புகளில் இருந்து வெளியேற முடியாத பொதுமக்கள், படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். முடிச்சூர்-மணிமங்கலம் சாலை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3D7vtrr
via

No comments