Breaking News

விட்டு விட்டு மழை பொழிந்தாலும் தீபாவளிக்காக பொருட்கள் வாங்க கடைவீதிகளில் மக்கள் குவிந்தனர்

விட்டு விட்டு பொழிந்த மழையி லும் தீபாவளியையொட்டி கடைவீதிகளில் பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர். போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் நவம்பர் 4-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. நேற்று ஞாயிற்றுகிழமை என்பதால் தீபாவளிக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்க புதுச்சேரியில் முக்கிய வீதிகளான நேரு வீதி,காந்தி வீதி, அண்ணா சாலை, மிஷன் வீதிகளில் உள்ள கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதி யது. மேலும், சண்டே மார்க்கெட்டி லும், சாலையோர கடைகள் தொடங்கி அனைத்து கடைகளிலும் பெண்கள், குழந்தைகள் மற்றும் ஆண்களுக்கு தேவையான அனைத்து உடைகள் மற்றும் பொருட்களை வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3nOwvC2
via

No comments