Breaking News

நவீன தொழில்நுட்பத்துடன் வடிகால் வசதிகள் அவசியம்: சென்னையில் மழைநீர் தேங்கும் பிரச்சினையை தீர்க்க கட்டுமானப் பொறியாளர்கள் ஆலோசனை

பெருநகர சென்னை மாநகராட்சியில் மழைநீர் தேங்கும் பிரச்சினையை தீர்க்க, நகர் முழுவதற்குமான மழைநீர் வடிகால் வரைபடத்தை உருவாக்கி, அதனை அதிநவீன தொழில்நுட்பத்துடன் செயல்படுத்த வேண்டும் என்று கட்டுமானப் பொறியாளர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

சென்னையில் ஆண்டுதோறும் மழைப் பொழிவும், வெள்ள பாதிப்பும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. சென்னையில் ஏற்கெனவே உள்ள மாஸ்டர் பிளான் மற்றும் அதன் செயலாக்கத்தில் உள்ள குறைகள்தான் மழைநீர் தேக்கத்துக்கான காரணம் என்று கூறும் கட்டுமானப் பொறியாளர்கள், சென்னை புறநகரில், குறிப்பாக பழைய மகாபலிபுரம் சாலையில் சிறுசேரி, கிழக்கு கடற்கரை சாலையில் கானாத்தூர், ஜிஎஸ்டி சாலையில் செங்கல்பட்டு உள்ளிட்ட வளர்ச்சியடைந்து வரும் பகுதிகளில் உள் கட்டமைப்புகளை ஏற்படுத்திக் கொடுத்த பிறகே வீடுகள் உள்ளிட்ட கட்டுமானங்களை கட்டுவதற்கும் நகரமயமாக்கலுக்கும் அரசு அனுமதிக்க வேண்டு்ம். இதில் எந்தவித சமரசமும் செய்யக் கூடாது என்கின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3payTnu
via

No comments