Breaking News

கனமழைக்கு நடுவில் அச்சுறுத்தும் மின்கம்பங்கள்

கடலூர் மாவட்டத்தில், விளைநிலங்கள் வழியாக கொண்டு செல்லப்படும் மின் மோட்டார் இணைப்புக்கான மின்கம்பங்கள் போதிய பராமரிப்பின்மையால் சாய்ந்து நிற்கின்றன. மழைக்காலத்தில், அசம்பாவிதம் ஏதும் நடந்து விடுமோ என்று விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

விவசாயிகள் தங்கள் நிலப் பகுதியில் உள்ள திறந்தவெளி அல்லது ஆழ்குழாய் கிணறுக்காக மின் இணைப்பு பெற்று வருகின்றனர். அவ்வாறு பெறப்படும் மின் இணைப்பை மின்வாரியத்தினரின் முறையாக பராமரிக்காததால், கடலூர் மாவட்டத்தில் சில இடங்களில் அந்த மின் கம்பங்கள் சாய்ந்து, மின் கம்பிகள் தாழ்வான நிலையில் தொங்கியபடி காட்சியளிக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3lnjO0G
via

No comments