Breaking News

சிவகாசி அருகே 9 வயது மாணவர் கொலை: 13 வயது சிறுவன் கைது

சிவகாசி அருகே உள்ள சித்து ராஜபுரத்தைச் சேர்ந்தவர் சேசுதாஸ் (39). இவரது மகன் மைக்கேல் அஜய் (9). அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 26-ம் தேதி காலை வெளியே சென்ற சிறுவன் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் தேடினர். ஆனால் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

இதையடுத்து சேசுதாஸ் சிவகாசி டவுன் காவல் நிலையத் தில் புகார் கொடுத்தார். போலீஸார் வழக்குப்பதிந்து மைக்கேல் அஜையை தேடி வந்தனர்.இந்நிலையில் சித்துராஜபுரம் பகுதியில் உள்ள ஒரு குட்டையில் சிறுவன் மைக்கேல்அஜய் உடல் நேற்று முன்தினம் மாலை மீட்கப்பட்டது. குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி இறந்ததாக முதலில் கூறப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3roKsub
via

No comments