Breaking News

பெண் தொழிலாளர்களுக்கு பாலியல் பிரச்சினைகள் வராதவாறு தொழிற்சாலைகளில் பாதுகாப்பு வசதி அவசியம்: அதிகாரிகளுக்கு அமைச்சர் கணேசன் அறிவுறுத்தல்

சென்னை: தொழிலக பாதுகாப்பு, சுகாதாரஇயக்ககத்தின் பணித் திறனாய்வுக் கூட்டம் தொழிலாளர் நலத் துறைஅமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் சென்னை கிண்டியில் உள்ள இயக்ககத்தின் அரங்கில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது: வெளி மாநிலத் தொழிலாளர்களையும் நமது தொழிலாளர்களுக்கு சரிசமமாக கருதி அவர்களுக்கு கிடைக்க வேண்டிய குறைந்தபட்ச கூலி, 8 மணிநேர பணி, மிகை நேரத்துக்கான இரட்டிப்பு ஊதியம், உரிய காலத்தில் சம்பளம், ஓய்வறை, கழிவறை வசதி ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3spePky
via

No comments