Breaking News

‘தவறு செய்பவர்கள் திருந்தி வந்தால் ஏற்பதே நல்லது’ - ஓபிஎஸ் பேச்சால் அதிமுக கிறிஸ்துமஸ் விழாவில் சலசலப்பு: சசிகலாவை குறிப்பிடவில்லை என ஜெயக்குமார் விளக்கம்

சென்னை: ‘தவறு செய்பவர்கள் திருந்தி வந்தால் அவர்களை ஏற்பதே நல்ல தலைமைக்கு ஏற்புடையது’ என்று, அதிமுக கிறிஸ்துமஸ் விழாவில் பழனிசாமி முன்னிலையில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். சசிகலாவை மனதில் கொண்டே அவர் பேசியதாக சலசலப்பு எழுந்தது.

சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள ‘ஏழைகளின் சிறிய சகோதரிகள்’ (லிட்டில்சிஸ்டர்ஸ் ஆஃப் தி புவர்) முதியோர் இல்லத்தில் அதிமுக சார்பில் நேற்று கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் கேக் வெட்டி, விழாவை தொடங்கி வைத்தனர். முதியோர் இல்லத்துக்கு சக்கர நாற்காலி உள்ளிட்ட உபகரணங்கள், உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்கினர். நிகழ்ச்சியில் அவர்கள் பேசியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3pnCj7X
via

No comments