Breaking News

நிகழ்நிலை புள்ளிவிவரங்களுடன் ‘மின்னணு தகவல் பலகை’ - தன் அறையில் இருந்தபடியே திட்டங்களை நாளை முதல் பார்வையிடுகிறார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: முதல்வர் தன் அறையில் இருந்தபடியே அனைத்து திட்டங்கள், அறிவிப்புகளின் மீதான நடவடிக்கையை கண்காணிக்கும் வகையில், நிகழ்நிலை புள்ளிவிவரங்களுடன் முதல்வருக்கான ‘மின்னணு தகவல் பலகை’யை தொடங்கி வைத்து, நாளை முதல் முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட உள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத்தேர்தலின்போது திமுக 500-க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை அளித்தது. இதுதவிர, தொகுதிகள்தோறும் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. தற்போது ஆட்சி பொறுப்பேற்று 7 மாதங்கள் கடந்துள்ள நிலையில், 205-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3pdKwLy
via

No comments