Breaking News

பொது இடங்களுக்கு வருபவர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளதை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்: ‘ஒமைக்ரான்’ அச்சுறுத்தலை தொடர்ந்து சுகாதாரத் துறை நடவடிக்கை

‘ஒமைக்ரான்’ வைரஸ் அச்சுறுத்தலைத் தொடர்ந்து பொது இடங்களுக்கு வருபவர்கள், தடுப்பூசி செலுத்தியுள்ளனரா என்பதைக் கண்காணிக்க ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது:

உலக நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தலாக விளங்கி வரும் ‘ஒமைக்ரான்’ வைரஸ் பரவலைத் தடுக்க தமிழகத்தில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, தென் ஆப்பிரிக்கா, சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட 12 நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3d8pqrd
via

No comments