Breaking News

ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் கோயில்களுக்கு பாரபட்சம்? - உரிய கால அவகாசம் வழங்கப்படுவதில்லை என புகார்

நீர்நிலைகளில் கட்டப்பட்டுள்ள கோயில்களை அகற்றும்போது பாரபட்சம் பார்க்கப்படுகிறது, கோயில் நிர்வாகங்களுக்கு உரிய கால அவகாசம் வழங்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கு ஒன்றில் அரசுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியது. குறிப்பாக, “மாநிலத்தில் ஏராளமான நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால், நிலத்தடி நீர் வெகுவாக குறைந்துவிட்டது. அதிகாரிகள் நீர் நிலைகளில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்க சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை. நீர் நிலைகள் மட்டுமல்லாமல் வனப் பகுதிகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. குடியிருப்புகள் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகள் தேவைதான். ஆனால், அதற்காக நீர் நிலைகளையும், வனப் பகுதிகளையும் அழித்துவிடக்கூடாது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை தமிழக தலைமைச் செயலர் உறுதி செய்ய வேண்டும். நீர் நிலைகள் பழைய நிலைக்கு கொண்டு வரப்பட்டால் தான் வருங்கால சந்ததிகளுக்கு அவை பயனுள்ளதாக இருக்கும். மேற்கொண்டு எந்த ஆக்கிரமிப்புகளும் ஏற்படாத வகையில் அரசு விழிப்புடன் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ofgfeZ
via

No comments