Breaking News

தாம்பரம், வரதராஜபுரம், முடிச்சூர் பகுதிகளில் வெள்ள பாதிப்பை தடுக்க ரூ.70 கோடியில் புதிய திட்டம்: நீர்வள ஆதாரத் துறையினர் தகவல்

தாம்பரம் அருகே உள்ள வரதராஜபுரம், முடிச்சூர் பகுதிகளில் வெள்ளை பாதிப்பை தடுக்கும் வகையில் ரூ.70 கோடியில் புதியதிட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் இந்தப் பகுதிகளில் வெள்ள பாதிப்புகள் குறைய வாய்ப்புள்ளதாக நீர்வள ஆதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2015-ம் ஆண்டு பெய்த மழையின்போது, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம், ஊரப்பாக்கம், பெருங்களத்தூர், ஆதனூர், மணிமங்கலம், மண்ணிவாக்கம் உள்ளிட்ட பகுதிகள் மிகக்கடுமையான பாதிப்பைச் சந்தித்தன. இதனால் கோடிக்கணக்கில் பொருள் சேதம் ஏற்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3xIPxym
via

No comments