Breaking News

அதிமுக சார்பில் சமூக வலைதள தேர்தல் பரப்புரை தொடக்கம்

ஆவடி: 'உயிரைக் காப்பாத்த மாஸ்க் போடுங்க! - ஊரைக் காப்பாத்த இரட்டை இலைக்கு ஓட்டுப் போடுங்க’ என்ற வாசகத்துடன் சமூக வலைதளம் மூலம் ஆவடி அதிமுகவினர் தேர்தல் பரப்புரையைத் தொடங்கியுள்ளனர். இதன் மூலம் அதிக வாக்குகளைப் பெறலாம் என அதிமுக நம்பிக்கை தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் பெருநகராட்சியாக இருந்த ஆவடி, கடந்த 2019-ம் ஆண்டு மாநகராட்சியாக உருவாக்கப்பட்டது. மாநகராட்சியாக உருவாக்கப்பட்டு, முதல் தேர்தலை தற்போது ஆவடி சந்திக்க உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. 48 வார்டுகளைக் கொண்ட ஆவடி மாநகராட்சியில் 3 லட்சத்து 12 ஆயிரத்து 33 வாக்காளர்கள் உள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://bit.ly/3rZGp6f
via

No comments